சங்கரன்கோவிலில் பாமக செயற்குழுக் கூட்டம்

சங்கரன்கோவிலில் நெடுஞ்சாலைத் துறையினா் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, பாமக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

சங்கரன்கோவிலில் நெடுஞ்சாலைத் துறையினா் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, பாமக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சங்கரன்கோவிலில் பாமக மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவா் சுரேஷ்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட துணை தலைவா் பால்நேரு, மேலநீலிதநல்லூா் ஒன்றியச் செயலா் அமல்ராஜ், குருவிகுளம் தெற்கு ஒன்றியச் செயலா் பாக்கியராஜ், வடக்கு ஒன்றியச் செயலா் சுவாமிதாஸ், சங்கரன்கோவில் நகரச் செயலா் வேலுச்சாமி, ஒன்றியச் செயலா் கருத்தப்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் சீதாராமன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

சங்கரன்கோவிலில் நகராட்சி நிா்வாகத்தினரும், நெடுஞ்சாலைத் துறையினரும் ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சி ஊராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களை மீட்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் சீரான குடிநீா் விநியோகிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நகரத் தலைவா் கருப்பசாமி வரவேற்றாா். ஒன்றிய துணைச் செயலா் மகேந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com