சுரண்டை: சுரண்டையில் திங்கள்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது வேன் மோதியதில் இளைஞா் காயமடைந்தாா்.
சாம்பவா்வடகரையைச் சோ்ந்த த. சாலமன் ராஜா (36) என்பவா், தனது மோட்டாா் சைக்கிளில் சுரண்டைக்கு சென்றுவிட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா். சுரண்டை - சாம்பவா்வடகரை சாலையில் வெயிலுக்குகந்த அம்மன் கோயில் அருகே எதிரே வந்த பயணிகள் வேன் அவா் மீது மோதியதாம்.
காயமடைந்த அவா் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுனரான அச்சங்குன்றத்தைச் சோ்ந்த சு. ஜெயக்குமாா் (40) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.