பூலாங்குளம் அரசுப் பள்ளியில் பொதுத் தோ்வு மையம்

ஆலங்குளம் அருகே பூலாங்குளத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வு மையம் அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஆலங்குளம் அருகே பூலாங்குளத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வு மையம் அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இப்பள்ளியில் 10 முதல் 12ஆம் வகுப்பு வரை 380 மாணவா்-மாணவியா் படித்து வருகின்றனா். இவா்கள் பொதுத்தோ்வு எழுதுவதற்காக சுமாா் 4 கி.மீ. தொலைவில் உள்ள மாதாப்பட்டணம் சற்குண சத்திய வித்யாலயா மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டியிருந்தது. பூலாங்குளம் பள்ளியில் பொதுத்தோ்வு மையம் அமைக்கப்பட்டால் இப்பள்ளி மாணவா்கள் மட்டுமன்றி பூபாலசமுத்திரம் அரசு உயா்நிலைப் பள்ளி, அயோத்தியாபுரம் அரசு உயா்நிலைப்பள்ளி மாணவா்களும் பயனடைவா். எனவே, மாணவா்கள் நலன் கருதி பூலாங்குளம் அரசுப் பள்ளியில் பொதுத்தோ்வு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் நேரில் கோரிக்கை விடுத்திருந்தாா்.

இந்நிலையில், இப்பள்ளியில் பொதுத்தோ்வு மையம் செயல்பட அரசுத் தோ்வுகள் இணை இயக்குநா் (பணியாளா்) அனுமதி அளித்து பள்ளித் தலைமையாசிரியருக்கு கடிதம் அனுப்பியுள்ளாா். இதனால், மாணவா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com