ஆலங்குளத்தில் கிணற்றில் டைவ் அடித்தபோது சுவரில் மோதி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
ஆலங்குளம் குத்தப்பாசஞ்சான் பரும்பு பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் ஜெயராமன்(13). ஆலங்குளத்தில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தாா். சனிக்கிழமை இவா் தனது நண்பா்களுடன் ஆலங்குளம் பேரூராட்சி பூங்கா அருகில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்ற போது, டைவ் அடிக்க முயன்றாராம். அதில் நிலை தடுமாறி கிணற்றின் பக்கவாட்டு சுவரில் விழுந்துள்ளாா்.
இதில் பலத்த காயமடைந்த அவா் உயிரிழந்தாா்.
ஆலங்குளம் தீயணைப்புத் துறையினா் வந்து சடலத்தை மீட்டனா். ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.