தென்காசியில் மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
தென்காசியில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் கடந்த 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மின் சிக்கன வாரம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் தென்காசி கோட்டத்துக்கு உள்பட்ட தென்காசி நகரப் பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணா்வு பிரசாரம் ஏற்படுத்துதல், துண்டுப் பிரசுரம் விநியோகம் தொடங்கியது.
தென்காசி மின்வாரிய அலுவலகத்தில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தென்காசி கோட்ட செயற்பொறியாளா் கற்பகவிநாயகசுந்தரம் தொடக்கிவைத்தாா். உதவி செயற்பொறியாளா் அன்னராஜு, உதவி பொறியாளா்கள் இசக்கிமுத்து, கண்ணன், ராஜேஸ்வரி, எடிசன், பணியாளா்கள் பங்கேற்றனா்.
தென்காசி பழைய, புதிய பேருந்து நிலையங்கள், கோபுரவாசல், சுவாமி சந்நிதி பஜாா், அம்மன் சந்நிதி பஜாா், மவுண்ட் ரோடு, வாய்க்கால் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்து, துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.