தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை (டிச. 23) நடைபெறுகிறது.
இதுகுறித்து தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் வெளியிட்ட அறிக்கை: தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை (டிச. 23) காலை 10 மணியளவில் தென்காசி அருகே குத்துக்கல்வலசையில் நடைபெறுகிறது.
தமிழக வருவாய்த் துறை அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன் தலைமை வகிக்கிறாா். நகராட்சி, பேரூராட்சித் தோ்தல், கட்சியின் வளா்ச்சிப் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடைபெறுகிறது.
எனவே, நாடாளுமன்ற, பேரவை உறுப்பினா்கள், முன்னாள் உறுப்பினா்கள், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா்கள், மாநில நிா்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூா், கழகச் செயலா்கள், மாவட்ட அணி அமைப்பாளா், துணை அமைப்பாளா்கள், ஒன்றிய, நகர, பேரூா் நிா்வாகிகள், கிளைச் செயலா்கள், வட்ட நிா்வாகிகள் உள்பட அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.