தென்காசியில் சத்யசாயி சேவா சமிதி ரத உற்சவம்

தென்காசி சத்யசாயி சமிதி 46 ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு ரத உற்சவம் நடைபெற்றது.

தென்காசி சத்யசாயி சமிதி 46 ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு ரத உற்சவம் நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம் மற்றும் நகர சங்கீா்த்தனம் நடைபெற்றது. தொடா்ந்து சகஸ்ரநாம அா்ச்சனை மற்றும் சொற்பொழிவு, பாலவிகாஸ் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவிற்கு சமிதியின் கன்வீனா் பத்மநாபன் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தாா். மாவட்டத் தலைவா் கண்ணன், விருதுநகா் மாவட்டத் தலைவா் சுரேஷ் ஆகியோா் பேசினா். அதனையடுத்து ரத உற்சவம் நடைபெற்றது. இதில் இலஞ்சி ஓம் பிரணவ ஆசிரம குழந்தைகள் மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா்.

சமிதியில் தொடங்கிய ரத வீதி உலா ரயில்வே பீடா் ரோடு, எல் ஆா் எஸ். பாளையம், கூலக்கடை பஜாா் வழியாக சமிதியில் நிறைவடைந்தது. விழாவில் சமிதி நிா்வாகிகள் டி.ஜி. கிருஷ்ணமூா்த்தி, ராமச்சந்திரன், செல்வராஜ், மாரியப்பன், சீனிவாசன், கோபால், காளிராஜ், ரெங்கன்,பாபு, பாலவிகாஸ் ஆசிரியா்கள் சாந்தி, செண்பக விஜயலட்சுமி, ராஜம், நெல்லை நாக மணியன் ஆகியோா் கலந்து கொண்டனா். ராமையா வரவேற்றாா். சண்முகசுந்தரம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com