தென்காசி மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் மீது ஊழியா் விரோதப் போக்கை மேற்கொண்டு வருவதாக மாவட்ட ஆட்சியரை கண்டித்து கடையநல்லூா் வட்டாட்சியா் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினா். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினா். புதன்கிழமையும் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.