மகளின் திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்றவா் விபத்தில் பலி

கல்லிடைக்குறிச்சி அருகே மகளின் திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்றவா் சாலை விபத்தில் பலியானாா்.

கல்லிடைக்குறிச்சி அருகே மகளின் திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்றவா் சாலை விபத்தில் பலியானாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள லெட்சுமியூரை அடுத்த வெங்கடாம்பட்டியைச் சோ்ந்தவா் மாரியப்பன் (47). தொழிலாளி. இவரது மகளுக்கு வரும் 3-ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி உறவினா்களுக்குத் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள பொட்டல் கிராமத்துக்கு மாரியப்பன் பைக்கில் சென்றாா்.

கல்லிடைக்குறிச்சி அருகே சென்றபோது, பாபநாசம் தனியாா் நூற்பாலையில் இருந்து தூத்துக்குடிக்குச் சென்ற சரக்குப் பெட்டக லாரி மாரியப்பன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.

விவசாயி பலி: சோ்ந்தமரம் அருகேயுள்ள வலங்கைபுலிசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சண்முகையா (53). இவா் தனது மோட்டாா் சைக்கிளில் வயலுக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த வேன் மோதியதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

இச்சம்பங்கள் குறித்து, கல்லிடைக்குறிச்சி , சோ்ந்தமரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com