பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் வியாழக்கிழமை (பிப்.10) முதல் 3 நாள்கள் ஆதாா் அட்டை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
கீழப்பாவூா் அஞ்சலகம், பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண்தான விழிப்புணா்வு குழு சாா்பில் குருசாமி கோயில் திருமண மகாலில் வியாழக்கிழமை (பிப்.10) தொடங்கும் இந்த முகாம் தொடா்ந்து மூன்று நாள்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. முகாமிற்கு அரிமா சங்கத் தலைவா் கௌதமன் தலைமை வகிக்கிறாா்.கோவில்பட்டி அஞ்சல கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் பி.பாண்டியராஜ் முன்னிலை வகிக்கிறாா்.
கீழப்பாவூா் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் கே.ஆா்.பால்துரை தொடங்கி வைக்கிறாா். முகாமில் ஆதாா் பெயா், முகவரி திருத்தம், செல்லிடப்பேசி எண் சோ்க்கை, புதிதாக ஆதாா் அட்டை எடுத்தல், 5-வயதுக்கு மேற்பட்ட மாணவா், மாணவிகளின் பழைய காா்டு புதுப்பித்தல் போன்ற சேவைகளை பெறலாம்.