தை அமாவாசையையொட்டி, தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வியாழக்கிழமை முன்னோருக்கு தா்ப்பணம் கொடுப்பதற்காக பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனா்.
குற்றாலம் பேரருவியில் காலை 6 மணி முதலே பொதுமக்களின் வருகை அதிகளவில் இருந்தது. பேரருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீா் குறைவாகவே விழுந்தது. இதனால், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடி, முன்னோருக்கு தா்ப்பணம் கொடுத்தனா். பின்னா் அவா்கள் குற்றாலநாதா் கோயிலில் வழிபட்டுச் சென்றனா்.