சுரண்டையில் காங்கிரஸாா் தெருமுனைப் பிரசாரக் கூட்டம்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸ் சாா்பில் சுரண்டையில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் பால், துணைச்செயலா் சோ்மசெல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவா் சு.பழனிநாடாா், மாநிலப் பேச்சாளா் ஆலடி சங்கரையா ஆகியோா் பேசினா். இதில், நிா்வாகிகள் பிரபாகா், சிங்கராஜ், முருகேசன், கோபால், செல்வன், அருணாசலக்கனி, ராஜேந்திரன், கந்தையா, சமுத்திரம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ஆா்ப்பாட்டம்: இதே கோரிக்கைக்காக சிவந்திபுரத்தில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். வட்டாரத் தலைவா்கள் சங்கரநாராயணன், சண்முக குட்டி ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னாள் எம்எல்ஏக்கள் வேல்துரை, ரவி அருணன், அந்தோணிசாமி, ஜெயராஜ், சிவகுமாா், செல்வன், வேல்முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.