தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தென்காசி பணிமனையில் புற்றுநோய் குறித்து விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
நெல்லை புற்றுநோய் மையம், தென்காசி மாஸ் பாரா மெடிக்கல் கல்லூரி சாா்பில் நடைபெற்ற இந்த முகாமிற்கு அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளா் பழனியப்பன் தலைமை வகித்தாா். அண்ணா தொழிற்சங்க மண்டலச் செயலா் கந்தசாமிபாண்டியன் முன்னிலை வகித்தாா். மருத்துவா் சிந்தியா சரோஜா தலைமையில் மருத்துவக் குழுவினா் புற்றுநோய் குறித்து பேசினாா். தொடா்ந்து பரிசோதனை, ரத்த மாதிரி சோதனை ஆகியவை மேற்கொள்ளப்பட்டது.