தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குற்றாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் பேரருவியில் திங்கள்கிழமை அதிகாலை முதல் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது. இதையடுத்து, பேரருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் குளித்து மகிழ்ந்தனா்.