சுரண்டை: சாம்பவர்வடகரை அருகே சந்தன மரம் வெட்டி கடத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.
சாம்பவர்வடகரை அருகேயுள்ள விந்தன்கோட்டை, கம்பிளி மலைப்பகுதியில் சந்தன மரம் அதிக அளவில் வளர்க்கப்படுகிறது. இந்த மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவது தொடர்பாக கிடைத்த தகவலையடுத்து கடையநல்லூர் வனத்துறை அலுவலர் செந்தில், சாம்பவர்வடகரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வி ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தன மரத்தை வெட்டி கடத்த முயற்சி செய்த சாம்பவர்வடகரை அக்ரஹார தெருவைச் சேர்ந்த வடகாசி(44) என்பவரைக் கைது செய்தனர்.
இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அண்மைக்காலமாக சந்தன மரம் வெட்டி கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.