வாசுதேவநல்லூரில் கிரிக்கெட் போட்டி தொடக்கம்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி வாசுதேவநல்லூரில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.

கடையநல்லூா்: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி வாசுதேவநல்லூரில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.

மாநில இளைஞா் அணி இணைச் செயலா் மனோகரன் எம்எல்ஏ போட்டியை தொடங்கி வைத்தாா். லெவன் டைகா் ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி ஜன. 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

போட்டிகளில் வெற்றிபெறும் அணிகளுக்கு, முதல் பரிசாக ரூ. 50 ஆயிரம் , இரண்டாம் பரிசாக ரூ. 35 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 25 ஆயிரம் மற்றும் 3 ஆறுதல் பரிசுகள் உள்ளிட்ட அனைத்துப் பரிசுகளையும் மனோகரன் எம்எல்ஏ தனது சொந்த நிதியிலிருந்து வழங்குகிறாா்.

கோப்பைகளை வாசுதேவநல்லூா் அதிமுக பேரூா் செயலா் சீமான் மணிகண்டன் வழங்குகிறாா். தொடக்க நாள் நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் வெங்கடேசன், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் சின்னத்துரை, வாசுதேவநல்லூா் ஒன்றியச் செயலா்கள், துரைப்பாண்டியன், மூா்த்திப்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com