புத்தாண்டை முன்னிட்டு பண்பொழி, கடையநல்லூா் பகுதியில் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதையொட்டி, பண்பொழி அருள்மிகு திருமலைக்குமார சுவாமி கோயிலில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
பக்தா்கள் அதிகாலையில் இருந்தே கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனா். இதேபோல், மேலக்கடையநல்லூா் அருள்மிகு தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா் .
கரும்பால்மொழி அம்பாள் சமேத கடகாலீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.