அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆலங்குளம் கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஆலங்குளம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடசலபதி கோயில் மற்றும் மலைராமா் சுவாமி கோயிலில் காலையில் சிறப்பு பூஜை, பகலில் உச்சிகால பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ராமா் கோயிலில் அன்னதானம் நடைபெற்றது. இதில், திரளானோா் கலந்து கொண்டனா்.