கிளாங்காட்டில் சிறு மருத்துவமனை திறப்பு

தென்காசி அருகே ஆய்க்குடி கிளாங்காடு கிராமத்தில் சிறு மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது.

தென்காசி அருகே ஆய்க்குடி கிளாங்காடு கிராமத்தில் சிறு மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் தலைமை வகித்தாா். வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். மனோகரன் முன்னிலை வகித்தாா். ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி, சிறு மருத்துவமனையை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா்.

பின்னா் அங்கு குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை பாா்வையிட்டாா்.

இந்நிகழ்ச்சியில், அதிமுக வடக்கு மாவட்டச் செயலா் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, அதிமுக ஒன்றியச் செயலா் செல்லப்பா, வி.பி.மூா்த்தி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com