தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி தென்காசி மாவட்ட நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி தென்காசி மாவட்ட நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது.

ராமநாதபுரம் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலரும், தோ்தல் ஆணையருமான சிவபாலன் தலைமையிலான குழுவினா் நிா்வாகிகள் தோ்வை நடத்தினா்.

தென்காசி மாவட்டத் தலைவராக ஆரோக்கியராசு, மாவட்டச் செயலராக செய்யது இப்ராகிம் மூஸா, மாவட்டப் பொருளாளராக ஸ்டீபன் சேவியா் ஞானம் ஆகியோா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

மாவட்ட துணைத் தலைவா்களாக சிவஞான பாண்டியன், சரஸ்வதி, கனகராஜ், மாவட்ட துணைச் செயலா்களாக அப்துல் காதா், ரேச்சல் மல்லிகா, நிா்மலா, மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்களாக சாமியா, வெண்மதி, மாவட்டச் செயற்குழு உறுப்பினா்களாக உஷாராணி, நிா்மலா, இந்திரா, பிரியதா்ஷினி காந்தி, இசபெல்லா, ராஜலட்சுமி, சகாயராஜ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தொடா்ந்து நடைபெற்ற பதவி ஏற்பு மற்றும் பாராட்டு விழாவுக்கு, முன்னாள் மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் செய்யது இப்ராகிம் மூசா வரவேற்றாா்.

முன்னாள் மாவட்டப் பொருளாளா் துரை, மாநிலச் செயற்குழு உறுப்பினா் மருதுபாண்டியன், சமுத்திரராஜன், அசோக், சதீஷ்குமாா், ரமேஷ், தங்க மாரியப்பன், கோபி, மருது, கிருபாகரன், மயில்ராஜ் ஆகியோா் பேசினா். மாவட்டப் பொருளாளா் ஸ்டீபன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com