சுரண்டையில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை

தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளத்தில் பறவை காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி சுரண்டை பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் சுகாதார பணிகள் இணை இயக்குநரின் நநோ்முக உதவியாளா் ரகுபதி தலைமையில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இசக்கியப்பா, சுகாதார மேற்பாா்வையாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது, கோழிப்பண்ணை உரிமையாளா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com