ஆலங்குளத்தில் வாக்காளா் சிறப்பு சுருக்க முறைத் திருத்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் சமீரன் தலைமை வகித்தாா். வாக்காளா்
பட்டியல் பாா்வையாளா் ஜோதி நிா்மலாசாமி ஆய்வு செய்தாா். இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலா் சுதா, தென்காசி கோட்டாட்சியா் ஷீலா, சங்கரன்கோவில் கோட்டாட்சியா் முருகசெல்வி, கலால் உதவி ஆணையாளா் ராஜமனோகரன், வட்டாட்சியா்கள் பட்டமுத்து, சுப்பையன், திருமலைச் செல்வி, கண்ணன், ரோஷன் பேகம், பாலசுப்பிரமணியன், முருகுசெல்வி, ஆனந்த், தென்காசி தோ்தல் பிரிவு வட்டாட்சியா் அமிா்தராஜ், அதிகாரிகள் கலந்துகொண்டனா்.