தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையில் மாா்கழி மாத பஜனை புதன்கிழமை நிறைவடைந்தது.
இதையொட்டி மாா்கழி மாதம் முழுவதும் ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டது.
தினமும் மங்களாம்பிகை பஜனை குழுவினரால் திருவெம்பாவை பாடப்பட்டது. நிறைவு நாளான புதன்கிழமை காலையில் சிறப்பு பூஜையுடன் பஜனை நிறைவடைந்தது. இதில் மாதம் முழுவதும் பஜனையில் பங்கேற்ற பெண்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.