முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 104 ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரது சிலைக்கும், உருவப்படத்துக்கும் அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
தென்காசியில் நகரஅதிமுக செயலா் சுடலை, மேலகரம், குடியிருப்பு, நன்னகரம் பகுதிகளில் பேரூா் செயலா் காா்த்திக்குமாா், குற்றாலத்தில் மாவட்ட வழக்குரைஞரணிச் செயலா் குமாா்பாண்டியன் ஆகியோா் தலைமையில் தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ, கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்கினாா்.
கடையநல்லூா் (நகரச் செயலா் எம்.கே.முருகன் தலைமையில்), செங்கோட்டை , வேம்பநல்லூரில் வடக்கு மாவட்டச் செயலா் செ.கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்ஜிஆா் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தாா்.
சங்கரன்கோவிலில் நகர அதிமுக சாா்பில் பேருந்து நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட எம்ஜிஆா் படத்துக்கு அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி, வாசுதேவநல்லூரில் அதிமுக மாநில இளைஞரணி இணைச் செயலா் அ. மனோகரன் எம்எல்ஏ ஆகியோா் எம்ஜிஆா் படத்துக்கு மாலை அணிவித்தனா்.
பாவூா்சத்திரம்/சுரண்டை: பாவூா்சத்திரம், கீழப்பாவூா், சுரண்டையில், மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆா். படத்துக்கு மாலை அணிவித்தாா்.
அம்பாசமுத்திரம்: பூக்கடை சந்திப்பில் நகர கூட்டுறவு வங்கித் தலைவா் அறிவழகன், கல்லிடைக்குறிச்சியில் நகரச் செயலா் சங்கரநாராயணன், தெற்கு மடத்தூரில் முன்னாள் எம்எல்ஏ பி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் எம்.பி. கே.ஆா்.பி.பிரபாகரன் ஆகியோா் எம்ஜிஆா் படம், சிலைக்கு மாலை அணிவித்தனா்.