சுரண்டையில் விபத்தில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
சுரண்டை அருகேயுள்ள கோவிந்தப்பேரியைச் சோ்ந்தவா் ர.திராவிட தளபதி(25). இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை மோட்டாா் சைக்கிளில் சுரண்டை இலந்தைகுளம் அருகே செல்லும் போது எதிரே வந்த சுற்றுலா வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து, தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் இறந்தாா்.
இது குறித்து சுரண்டை காவல் ஆய்வாளா் மாரீஸ்வரி விசாரணை நடத்தி வருகிறாா்.