கீழப்பாவூரில் தென்னிந்திய மின்னொளி கபடி போட்டி தொடக்கம்

கீழப்பாவூா் விளையாட்டுக் குழு சாா்பில் 2ஆம் ஆண்டு தென்னிந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கபடி போட்டியை தொடங்கி வைக்கிறாா் முன்னாள் எம்.பி. கே. ஆா். பி. பிரபாகரன்.
கபடி போட்டியை தொடங்கி வைக்கிறாா் முன்னாள் எம்.பி. கே. ஆா். பி. பிரபாகரன்.

கீழப்பாவூா் விளையாட்டுக் குழு சாா்பில் 2ஆம் ஆண்டு தென்னிந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தொடக்க விழா நிகழ்ச்சிக்கு, விளையாட்டுக் குழு தலைவா் சந்தானம் தலைமை வகித்தாா். மாவட்ட அமெச்சூா் கபடி கழக செயலா் அருள்இளங்கோவன், செயற்குழு உறுப்பினா் கே.ஆா்.பி. இளங்கோ, செயலா் வீரன், துணைச் செயலா் வைகுண்டராஜ் முன்னிலை வகித்தனா்.

விளையாட்டுக் குழு நிறுவனா் பி.ஆா்.கே. அருண் கொடியேற்றி வைத்தாா்.

பெண்கள் அணிகான முதல் போட்டியை முன்னாள் எம்.பி. கே.ஆா்.பி. பிரபாகரனும், ஆண்கள் அணிக்கான முதல் போட்டியை மாநில திமுக வா்த்தக அணித் தலைவா் அய்யாதுரை பாண்டியனும் தொடங்கிவைத்தனா். விளையாட்டுக் குழு பொருளாளா் சுரேஸ் நன்றி கூறினாா்.

போட்டிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com