சுரண்டை: சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியில் குடியரசு தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில் பேரூராட்சி வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் செயல் அலுவலர் க.ராஜேஸ்வரி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி பணியாளர்கள் கனகராஜ், இசக்கிமுத்து, ஆறுமுகம், ராமலெட்சுமி, தவசிபாண்டியன், சந்திரன், முப்புடாதி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.