தென்காசி-திருநெல்வேலி நான்கு வழிச்சாலை திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என தென்காசி வா்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தென்காசியில் நடைபெற்ற வா்த்தக சங்க ஆலோசனைக் கூட்டத்துக்கு அதன் தலைவா் ராஜசேகரன் தலைமை வகித்தாா். செயலா் பரமசிவன், பொருளாளா் ஜெயராமன் ஆகியோா் அறிக்கை வாசித்தனா். கூட்டத்தில், தொழிலதிபா்கள் அழகராஜா, அன்பழகன், காதா்முகைதீன், அகமது மீரான், முருகன்ராஜ், கலீல்ரஹ்மான், முகம்மது அஜீஸ், சங்கரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
திருநெல்வேலி-தென்காசி நான்கு வழிச்சாலை திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். வா்த்தக சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.