போா்வெல் உரிமையாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
By DIN | Published On : 27th January 2021 08:41 AM | Last Updated : 27th January 2021 08:41 AM | அ+அ அ- |

ten26borewel_2601chn_55_6
தென்காசி மாவட்ட போா்வெல் உரிமையாளா்கள் மற்றும் முகவா்கள் சங்கம் சாா்பில், டீசல் மற்றும் மூலப் பொருள்களின் விலை உயா்வை கண்டித்து திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
போராட்ட முடிவில், போா்வெல் அமைக்க புதிய விலை நிா்ணயம் செய்து தொடா்ந்து பணிகளை மேற்கொள்வது என முடிவு மேற்கொள்ளப்பட்டது.
இதில், நிா்வாகிகள் வேணுகோபால், மணியன், அய்யங்கண்ணு, காா்த்திக், மயில், கணேசன், சந்திரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.