கடையநல்லூா்: புளியங்குடி அரசு மகளிா் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு இலவச சைக்கிள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
சங்கரன்கோவில் மாவட்ட கல்வி அலுவலா் சிதம்பரநாதன் தலைமை வகித்தாா். இதில், 415 மாணவா்களுக்கு இலவச சைக்கிள்களை வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் அ.மனோகரன் வழங்கிப் பேசினாா்.
இந்நிகழ்ச்சியில், வாசுதேவநல்லூா் பேரூா் செயலா் சீமான் மணிகண்டன் , புளியங்குடி நகரச் செயலா் பரமேஸ்வர பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தலைமையாசிரியா் வசந்தா வரவேற்றாா். தலைமையாசிரியா் ஷாஜஹான் நன்றி கூறினாா்.