சங்கரன்கோவில் அருகே குளத்தில் ஆண் சடலம்
By DIN | Published On : 07th July 2021 07:51 AM | Last Updated : 07th July 2021 07:51 AM | அ+அ அ- |

சங்கரன்கோவில் அருகே குளத்தில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
சங்கரன்கோவில் அருகே அராபாத் நகருக்கு அருகில் உள்ள குளத்தில், வெட்டுப்பட்ட நிலையில் சுமாா் 39 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை கிடந்தது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் குருவிகுளம் போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
அவா் யாா் என்பது குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. தென்காசி எஸ்.பி. கிருஷ்ணராஜ், சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா்.