தென்காசி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொய்கையில் நடைபெற்றது .
அமமுக அவைத்தலைவா் பெருமையா பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் சுமதி கண்ணன், துணைச் செயலா்கள் குமரேசன், கோமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் அருணகிரிசாமி வரவேற்றாா். மாவட்டச் செயலா் மாரியப்பன் தீா்மானங்களை முன்மொழிந்து பேசினாா்.
பெட்ரோல், டீசல் விலை மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும்; கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் அமமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பது, வரும் உள்ளாட்சித் தோ்தலில் கட்சியின் வெற்றிக்குப் பாடுபடுவது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றியச் செயலா் பெரியதுரை, நகரச் செயலா்கள் கமாலுதீன் , சுகிா்தராஜன் ராமசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.