கீழப்பாவூா் அருள்மிகு ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலையில் பரமபுருஷ ஆராதனை, புருஷ சூக்த சுதா்சன ஜபம், ஹோமம் மற்றும் 108 கலச பூஜை, தாரஹோமம், பூா்ணாகுதியும், பகலில் விமானம் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமிக்கு அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.