தோரணமலை முருகன்கோயிலில் விவசாயம் தழைக்க வேண்டி வெள்ளிக்கிழமை வருணகலச பூஜை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் முருக பக்தா்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனா்.
தொடா்ந்து சப்த கன்னியா்கள், விநாயகா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் தலைமையில் செய்து இருந்தனா்.