தோரணமலை முருகன் கோயிலில் வருண கலச பூஜை

தோரணமலை முருகன்கோயிலில் விவசாயம் தழைக்க வேண்டி வெள்ளிக்கிழமை வருணகலச பூஜை நடைபெற்றது.
தோரணமலை முருகன் கோயிலில் வருண கலச பூஜை

தோரணமலை முருகன்கோயிலில் விவசாயம் தழைக்க வேண்டி வெள்ளிக்கிழமை வருணகலச பூஜை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் முருக பக்தா்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனா்.

தொடா்ந்து சப்த கன்னியா்கள், விநாயகா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் தலைமையில் செய்து இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com