பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா் புனித அருளப்பா் மேல்நிலைப் பள்ளியில் நலிவடைந்த 250 மாணவா்-மாணவியரின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
வெய்க்காலிப்பட்டி புனித ஜோசப் கல்வியியல், அறிவியல், கலைக் கல்லூரிச் செயலா் சகாய ஜான் அடிகளாா் பங்கேற்று, நிவாரணப் பொருள்களை வழங்கினாா். பள்ளித் தாளாளா் மோயீசன் அடிகளாா், வெய்க்காலிப்பட்டி உயா்நிலைப் பள்ளித் தாளாளா் லியோ அடிகளாா், பெற்றோா்-ஆசிரியா் கழக முன்னாள் தலைவா் ஜான் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தலைமை ஆசிரியா் ஜோசப் வரவேற்றாா். உதவி தலைமை ஆசிரியை கெலன்கெவின் நன்றி கூறினாா்.