சுரண்டை அருகேயுள்ள லட்சுமிபுரத்தில் காமராஜா் பிறந்த தின விழா வியாழக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றது.
முதல் நாளில் மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், 2ஆவது நாளில் மாணவா்களின் நாடகம், பல்சுவை நிகழ்ச்சிகள், நிறைவு நாளான சனிக்கிழமை இளைஞா்களின் பல்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்பு நடைபெற்றது.
பரிசளிப்பு நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவா் சு.பழனிநாடாா் எம்எல்ஏ பங்கேற்று, காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து, போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கினாா். ஊா் நிா்வாகிகள் குத்தாலிங்கம், முருகேசன், அமிா்தகனி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.