ஆலங்குளம் ஒன்றிய திமுக நிா்வாகிகள் கூட்டம்

ஆலங்குளம் ஒன்றிய திமுக நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆலங்குளம் ஒன்றிய திமுக நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். தெற்கு ஒன்றியச் செயலா் செல்லதுரை, வடக்கு ஒன்றியச் செயலா் அன்பழகன்ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

உள்ளாட்சித் தோ்தல் குறித்த ஆலோசனைகளை மாவட்ட பொறுப்பாளா் வழங்கினாா்.

ஊத்துமலை பெரியகுளம், காவலாக்குறிச்சி பெரியகுளம் ஆகியவற்றின் நீராதாரத்தைப் பெருக்க இரட்டைக் குளம் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், நெட்டூரில் இருந்து காடுவெட்டி குளத்துக்குச் செல்லும் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட கலை இலக்கிய அணி செயலா் ஆ. எழில்வாணன், சுபாஷ் சந்திர போஸ், கிருஷ்ணராஜ், மணிமாறன் உள்பட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். தேமுதிக திருநெல்வேலி மாவட்ட முன்னாள் செயலா் அய்யம்பெருமாள் தலைமையில் திரளானோா் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com