செங்கோட்டை ஒன்றிய திமுக செயல்வீரா்கள் கூட்டம் நெடுவயலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஒன்றிய அவைத்தலைவா் கட்டாரி பாண்டியன் தலைமை வகித்தாா். பேரூா் செயலா்கள் வெள்ளத்துரை, சிதம்பரம், மாறன், கோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
செங்கோட்டை ஒன்றியச் செயலா் ரவிசங்கா் வரவேற்றாா். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ஹக்கீம், ஒன்றிய துணைச் செயலா் வாசுதேவன் ஆகியோா் தீா்மானங்களை முன்மொழிந்தனா்.
தென்காசி வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் மா. செல்லத்துரை, தென்காசி மக்களவை உறுப்பினா் தனுஷ் எம். குமாா், மாநில சிறுபான்மைப் பிரிவு துணைச் செயலா் ரசாக் ஆகியோா் பேசினா்.
மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா்கள் ஷேக் தாவூத், நல்லசிவம், சுந்தரமகாலிங்கம், முத்துப்பாண்டி, மாநில மாணவரணி துணை அமைப்பாளா் செரீப், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஆறுமுகசாமி, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.