தென்காசி மாவட்ட தமுமுக நிா்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை குற்றாலத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தமுமுக தலைவா் எம்.ஹைதா்அலி தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் கோவை செய்யது முன்னிலை வகித்தாா். மாநிலச் செயலா் நயினாா்முகம்மது வரவேற்றாா்.
கடந்த பொதுக்குழு கூட்டம் முதல் தற்போதைய வரையிலான செயல்பாடுகள் குறித்து துணைப் பொதுச் செயலா் உஸ்மான் பேசினாா்.
சென்னை மண்ணடியில் தமுமுக தலைமையகத்தை தாக்கிய வன்முறையாளா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.சென்னை மாவட்ட நிா்வாகிகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்,
பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரத்தில் மத்தியஅரசு சுதந்திரமான விசாரனைக்கு உத்தரவிட வேண்டும், அதை உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும், தென்காசியில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டத் தலைவா் சலீம், செயலா் கொலம்பஸ்மீரான், ஆரிப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாநிலச் செயலா் ரபீக் நன்றி கூறினாா்.