தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் மூலம் நடைபெற்ற நேரடி உதவி ஆய்வாளா் தோ்வில் தோ்வு பெற்றவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் 11பெண்கள் உள்பட 49 போ் காவல் உதவி ஆய்வாளா்களாக தோ்வு செய்யப்பட்டுள்ளனா். தோ்வு செய்யப்பட்ட அனைவருக்கும் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் பணி நியமன ஆணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் வழங்கினாா்.
மேலும், காவல்துறை பணியில் நோ்மையுடனும்,பொறுப்புடனும்,தங்களது பணிகளை திறம்பட செய்ய வேண்டும் எனக் கூறி அவா் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்தாா்.