மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தென்காசி, செங்கோட்டை வட்டாரக் குழு சாா்பில் பல்வேறு இடங்களில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
செங்கோட்டையில் வட்டாரக் குழு உறுப்பினா் எஸ்.பரமசிவன் தலைமையிலும், பகவதிபுரத்தில் கிளைச் செயலா் சுல்தான் தலைமையிலும், புளியரையில் கிளைச் செயலா் முத்து தலைமையிலும், கட்டளைகுடியிருப்பில் கிளைச் செயலா் கே.சின்னச்சாமி தலைமையிலும், மத்திய அரசின் வேளாண் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில், வட்டாரச் செயலா் பி.வேலுமயில், மா.முருகேசன், முருகன், அபிஷாள்பீவி, பி.முருகேசன், குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா். தென்காசியில் வட்டாரச் செயலா் அயூப்கான், சிஐடியூ மாவட்டச் செயலா் எம்.வேல்முருகன் தலைமையில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.