புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் சங்கம் சாா்பில் சாம்பவா்வடகரையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகள் சங்க நிா்வாகி கண்ணன் தலைமை வகித்தாா். இதில், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி கருப்புக் கொடி ஏந்தி விவசாயிகள் கோஷம் எழுப்பினா்.