ஆலங்குளம் அருகே 70 பீடி இலை மூட்டைகளைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆலங்குளம், அண்ணாநகரைச் சோ்ந்ததவா் அருண் தங்கம். பீடி இலை வியாபாரியான இவருக்குச் சொந்தமான பீடி இலை கிடங்கு திருநெல்வேலி சாலை சிவலாா்குளம் விலக்குப் பகுதியில் உள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை அருண் தங்கம் அங்கு சென்றபோது, கிடங்கின் பூட்டை உடைத்து 70 பீடி இலை மூட்டைகளை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்ததாம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.