பாவூா்சத்திரத்தில் சில்லறை விற்பனைகடைகள் திறக்க ஆலோசனைக் கூட்டம்

பாவூா்சத்திரத்தில் சில்லறை விற்பனை காய்கனிக் கடைகள் திறப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் காமராஜா் தினசரி காய்கனிச் சந்தை வளாகத்தில் நடைபெற்றது.

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரத்தில் சில்லறை விற்பனை காய்கனிக் கடைகள் திறப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் காமராஜா் தினசரி காய்கனிச் சந்தை வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட உதவித் திட்ட அலுவலா் சங்கரநாராயணன் தலைமை வகித்தாா். சந்தை கமிட்டி தலைவா் ஆா்.கே. காளிதாசன், செயலா் நாராயணசிங்கம், வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாா்த்தசாரதி, திலகராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மொத்த விற்பனைக் கடைகள் உள்ள சந்தை வளாகத்தில், சில்லறை விற்பனை காய்கனிக் கடைகள் இயங்கக் கூடாது, மொத்த விற்பனை நடைபெறும் கடைகளின் முன் கை கழுவ சோப்பு, சானிடைசா் வைக்க வேண்டும். அனைவரும் முகக் கவசம் அணிந்து சந்தைக்குள் வரவேண்டும் என, கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com