தென்காசி மாவட்டத்தில் கடந்த 2019-2020 ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரி மற்றும் கலை கல்லூரிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற காவல் ஆளிநா்கள் மற்றும் அதிகாரிகளின் குழந்தைகளுக்கு புதன்கிழமை கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல்துறையின் சேமநல நிதியிலிருந்து கல்வி உதவித்தொகையை காவல் கண்காணிப்பாளா் ஆா்.கிருஷ்ணராஜ் வழங்கிப் பேசினாா்.
கலைக் கல்லூரிகளில் பயிலும் மாணவா், மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும், பொறியியல் கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு தலா ரூ.18 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது.