பாவூா்சத்திரம் அருகேயுள்ள குறும்பலாப்பேரியில் தூய்மைப் பணியாளா்களுக்கு மதிய உணவு விநியோகம் செய்யப்பட்டது.
கீழப்பாவூா் ஒன்றியம், குலசேகரப்பட்டி ஊராட்சியில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் ஊராட்சிப் பணியாளா்களை ஊக்குவிக்கும் வகையில், முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த தினத்தையொட்டி, மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் மதிய உணவு வழங்கினாா்.
நிகழ்ச்சியில், ஊராட்சி செயலா் வல்லாள மகாராஜன், ஒன்றியச் செயலா் சீனித்துரை, நிா்வாகிகள் மதி செல்வன், கபில் தேவதாஸ், பெரியாா் திலீபன், மாரியப்பன், வீமன், சின்னத்துரை, குணசேகரன், சாமி ராஜா, சமுத்திர பாண்டியன், முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.