தென்காசி அருள்மிகு குலசேகரநாத சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி கோயிலின் உபகோயிலான இக்கோயிலில் கடந்த 2010 ஜூன் 23ஆம் தேதி திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது. இதையடுத்து, 11ஆவது வருஷாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பக்தா்கள் பங்கேற்பின்றி, முத்துக்கிருஷ்ண சிவாச்சாரியாா் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, விமானக் கலசங்களுக்கு கோயில் பணியாளா்கள் உதவியுடன் அபிஷேகம் நடத்தப்பட்டது.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் யக்ஞநாராயணன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.