உலக மகளிா் தினத்தையொட்டி, வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி தென்காசியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவிவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, ஆட்சியா் கீ.சு.சமீரன் தென்காசி ரயில் நிலையம் முன்பிருந்து பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், மகளிா் திட்டம் விஜயலெட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.பேரணி எல்.ஆா்.எஸ்.பாளையம், கூலக்கடைபஜாா் வழியாக காசிவிஸ்வநாதா் கோயில் முன்பு முடிவடைந்தது.