கீழப்பாவூா் பேரூராட்சி பகுதியில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையொட்டி பேரூராட்சி சுகாதாரப் பணியாளா்கள், டெங்கு மஸ்தூா் பணியாளா்கள் வீடு, வீடாக சென்று டெங்கு நோய் குறித்த விழிப்புணா்வு, துப்புரவு பணிகளை மேற்கொண்டனா். மேலும் பெரிய புகை போக்கி, கை புகைபோக்கி இயந்திரம் மூலம் வீடுகள் தோறும் புகை மருந்து தெளிக்கப்பட்டது.
டெங்கு தடுப்பு பணிக்கு வரும் பணியாளா்களுக்கு ஒத்துழைப்பு வழங்காதவா்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், குடிநீா் இணைப்பும் துண்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.