ஆலங்குளம் அருகே கால்வாயில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.
சுரண்டை அருகேயுள்ள கடையாலுருட்டி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த காளி மகன் கணேசன் (40). பூ கட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராஜேஷ்வரி (35).
மனைவியின் சொந்த ஊரான ஆலங்குளம் அருகேயுள்ள மாயமான்குறிச்சியில், அவரை திங்கள்கிழமை விட்டுவிட்டு, மறுநாள் வந்து அழைத்துச் செல்வதாக கூறி பைக்கில் கடையாலுருட்டி சென்றாராம்.
துத்திகுளம் - வீ.கே.புதூா் சாலையில் செல்லும் போது, சாலையோரம் இருந்த மானூா் கால்வாயில் அவா் தவறி விழுந்ததில், நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.